எத்திராஜ் கல்லுாரி அணி சாம்பியன்!
பட்டாபிராம்: மாநில அளவிலான கபடி போட்டியில், எத்திராஜ் கல்லுாரி அணி சாம்பியன் பட்டம் வென்றது. பட்டாபிராம் இந்து கல்லுாரி சார்பில், அதன் வளாகத்தில், மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள் நடந்தன. இறுதி போட்டிகளில், பெண்கள் பிரிவுகளில், கபடியில் எத்திராஜ் கல்லுாரி அணியும், வாலிபால் போட்டியில், எஸ்.ஆர்.எம்., பல்கலை அணியும், சாம்பியன் பட்டம் வென்றன. ஆண்களில், கூடைபந்து போட்டியில் இந்துஸ்தான் கலை கல்லுாரி அணியும், கால்பந்து போட்டியில் சத்யபாமா பல்கலை அணியும், சாம்பியன் பட்டம் பெற்றன.