உள்ளூர் செய்திகள்

யோகா போட்டியில் அசத்தும் சகோதரர்கள்

மதுரை: விருதுநகர் இந்து நாடார் மேல்நிலைப் பள்ளியில் 8ம் வகுப்பு படிப்பவர் சல்மான்கான். ஸ்ரீதுர்கா பள்ளியில் 5ம் வகுப்பு படிப்பவர் அசாருதீன். சகோதரர்களான இவர்கள், பல்வேறு யோகா போட்டியில் பங்கேற்று வருகின்றனர். சில நாட்களுக்கு முன், பெங்களூருவில் நடந்த தென்னிந்திய யோகாசன சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்றனர். இதில் 10-12 வயது பிரிவில் அசாருதீனும், 12-15 வயது பிரிவில் சல்மான்கானும் தங்க பதக்கம் வென்று சாதனை படைத்தனர். தேசிய போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர். இவர்களை பெற்றோர் சமஸ்கான், மும்தாஜ்பேகம் மற்றும் பள்ளி நிர்வாகத்தினர், ஆசிரியர்கள், மாணவர்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்