கோடைப் பண்பலையில் அறிவிப்பாளர் பணி
கொடைக்கானல்: கொடைக்கானல் பண்பலை வானொலி நிலையத்தில் நிகழ்ச்சி அடிப்படையில் பகுதிநேர அறிவிப்பாளர் பணிக்கு, வரும் ஜனவரி இறுதி வாரத்தில் குரல்தேர்வு நடக்க உள்ளது. அதற்கான தகுதிகளாக, 30 வயது வரையுள்ள, ஏதேனும் ஒரு பட்டம் பெற்றவர், இலக்கியம், உலக நடப்பு, கலை, பண்பாடு, மொழி பெயர்ப்பில் நாட்டம் உள்ளவராக, வானொலிக்கு ஏற்ற குரல்வளத்துடன் இருத்தல் வேண்டும். விண்ணப்பிக்க விரும்புவோர் தன் விபரக்குறிப்பை இலக்கிய நடையில் ஒரு பக்க அளவிலும், தன்னை ஈர்த்த நடப்பு நிகழ்வு ஏதேனும் ஒன்றைப் பற்றிய குறிப்பை ஒரு பக்க அளவிலும் எழுதி, சுயவிலாசமிட்ட உறையினை இணைத்து அனுப்ப வேண்டும். வருகிற ஜன., 4க்குள் தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரியுடன் அனுப்ப வேண்டும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.