உள்ளூர் செய்திகள்

தொழில்நுட்பத்தை சரியாக பயன்படுத்த வேண்டும்

தொண்டாமுத்தூர்: ஈஷா யோகா மையம் சார்பில், தொழில் முனைவோருக்கான இன்சைட் நிகழ்ச்சி, கோவை ஈஷா யோகா மையத்தில் துவங்கியது.25க்கும் மேற்பட்ட, தொழில் முனைவோர் கலந்து கொண்டுள்ளனர்.இந்நிகழ்ச்சியில், மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், நுண்ணறிவு தொழில்நுட்பம், டிஜிட்டல் இந்தியா சட்டம், 6ஜி தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து, சத்குருவுடன் கலந்துரையாடினார்.துவக்க விழாவில் சத்குரு பேசுகையில், பாரதம், வேலைவாய்ப்புகளின் நாடல்ல. தொழில் முனைவோரின் நாடாக இருந்துள்ளது. நமக்கு எப்போதும் தொழில் முனையும் திறன்கள் இருந்துள்ளன. அதை பெரிய அளவிற்கு வளர்ப்பது மட்டுமே இப்போதைய தேவை. தொழில்நுட்பத்தை நாம் சரியாக பயன்படுத்தவில்லை என்றால், அது நம் வாழ்வின் மிக கொடிய பிரச்னையாக மாறக்கூடும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்