பள்ளி, கல்லுாரி வாகனங்களுக்கு அபராதம்
கோலார்: கோலார் மாவட்டத்தில் பள்ளிகள், கல்லுாரிகளின் வாகனங்களின் வரி, காப்பீடு, தகுதி உள்ளிட்டவற்றை போக்குவரத்துத்துறை அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர்.அப்போது இயக்குவதற்கு தகுதியற்ற நான்கு பஸ்களின் ஆர்.சி., என்ற பதிவுச்சான்றிதழை அதிகாரிகள் ரத்து செய்தனர். கடந்த ஏப்ரல் முதல் விதிமீறல்களுடன் வாகனங்களை இயக்கியதற்காக பள்ளி வாகனங்கள் மீது 177 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதற்காக 9.60 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.