துணைவேந்தர்களை நியமிக்க வலியுறுத்தல்
சேலம்: அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் அமைப்பின், வடதமிழக, 31வது மாநில மாநாடு, சேலத்தில் நடந்தது. தேசிய துணைத்தலைவர் நாகலிங்கம் தலைமை வகித்தார்.அதில் தமிழக அரசு, பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள துணைவேந்தர் பணியிடங்களை உடனே நிரப்புதல்; தனியார் பல்கலை சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெறுதல்; நீதிமன்ற உத்தரவுகளை தாமதமின்றி அமல்படுத்தல்; மத சுதந்திரம், மனித உரிமைகளை பாதுகாக்க, அரசு முன்வருதல் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.