உள்ளூர் செய்திகள்

ஜி.எஸ்.எல்.வி., எப்-15 ராக்கெட் ஏவுதலை காண வாய்ப்பு: இன்று மாலை முதல் பதிவு

ஸ்ரீஹரிகோட்டா: ஜி.எஸ்.எல்.வி. எப்-15 ராக்கெட் ஏவுதலை பார்ப்பதற்கு இன்று மாலை 6 மணி முதல் பதிவு செய்துகொள்ளலாம் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது.ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் 2வது ஏவுதளத்தில் இருந்து என்.வி.எஸ்-02 செயற்கைக்கோளை சுமந்து செல்லும் ஜி.எஸ்.எல்.வி. எப்-15 ராக்கெட் ஜனவரி 29 காலை 6.23 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது.இந்த செயற்கைக்கோளை வடிவமைப்பதற்கு, இந்திய தொழிற்துறை நிறுவனங்கள் முக்கிய பங்களிப்பை வழங்கியுள்ளன. ஜி.எஸ்.எல்.வி எப் - 15 விண்கலம், இஸ்ரோவின் 94வது விண்கலமாகும்.ராக்கெட் விண்ணில் ஏவுதலை நேரில் காண விரும்புவோர், முன்பதிவு செய்ய இஸ்ரோ வேண்டுகோள் விடுத்துள்ளது. இன்று 23ம் தேதி மாலை 6:00 மணிக்கு https://lvg.shar.gov.in/VSCREGISTRATION/index.jsp இல் தொடங்கும்.ராக்கெட் ஏவுதலை காண விரும்புவதற்கு விண்ணப்பம் செய்வோர், ஆதார் அட்டை/ஓட்டுநர் உரிமம் / அரசு வழங்கிய ஏதேனும் ஐடி, மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் ஐடியை தயாராக வைத்திருக்க வேண்டும்.நிறுவன முன்பதிவுக்கு நிறுவனத் தலைவரிடமிருந்து கையொப்பம் மற்றும் முத்திரையுடன் கூடிய கடிதம் கட்டாயமாகும் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்