கொட்டுது கனமழை.. 24 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
சென்னை: கனமழை காரணமாக, 8 மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கும், 16 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும், இன்று(டிச.,13) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தின் பல பகுதிகளிலும், கனமழை பெய்து வருகிறது. இதன்காரணமாக பல மாவட்டங்களிலும் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து, அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர்.பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை:* விழுப்புரம்* தூத்துக்குடி* தென்காசி* தஞ்சாவூர்* திருநெல்வேலி* திருச்சி* அரியலூர்* பெரம்பலூர்பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை:* மதுரை* திண்டுக்கல்* சிவகங்கை* விருதுநகர்* ராமநாதபுரம்* தேனி* கரூர்* கடலூர்* புதுக்கோட்டை* மயிலாடுதுறை* சேலம்* தருமபுரி* திருவாரூர்* நாமக்கல்* நாகை* திருப்பூர்கனமழை காரணமாக, புதுச்சேரி, காரைக்கால் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.