உள்ளூர் செய்திகள்

10ம் வகுப்பு சிறப்பு துணைத் தேர்வு; அசல் மதிப்பெண் சான்றிதழ் விநியோகம்

சென்னை: பத்தாம் வகுப்பு சிறப்பு துணைத் தேர்வு எழுதிய தனித்தேர்வர்கள் தங்களது அசல் மதிப்பெண் சான்றிதழ்களை வருகிற செப்.,02 அன்று காலை 10.00 மணி முதல் செப்.,09  வரை தாங்கள், தேர்வெழுதிய தேர்வு மையங்களில் பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழ்நாடு அரசு தேர்வாணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.மேலும், செப்.,09க்கு பிறகு சம்பந்தப்பட்ட அரசுத் தேர்வுகள் மண்டலத் துணை இயக்குநர் அலுவலகங்களில் பெற்றுக் கொள்ளலாம். நடைபெற்று முடிந்த ஜூன்/ஜூலை 2015 10ம் வகுப்பு சிறப்பு துணைத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை   24.07.2015 அன்று முதல் இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. இத்தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் 20.10.2015 வரை மட்டுமே செல்லத்தக்கதாகும்.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்