உள்ளூர் செய்திகள்

10ம் வகுப்பு சி.பி.எஸ்.இ., தேர்வு கிரீன் பார்க் பள்ளி அசத்தல்

நாமக்கல்: பத்தாம் வகுப்பு சி.பி.எஸ்.இ., தேர்வில், நாமக்கல் கிரீன் பார்க் பள்ளி மாணவ, மாணவியர் இந்திய மற்றும் மாநில அளவில் சாதனை படைத்துள்ளனர்.கடந்த 2025 - 26ம் ஆண்டில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு சி.பி.எஸ்.இ., பொது தேர்வு முடிவுகள் வெளியானது. இதில், நாமக்கல் மாவட்டம் போதுப்பட்டியில் செயல்பட்டு வரும், கிரீன் பார்க் இன்டர்நேஷனல் சீனியர் செகண்டரி சி.பி.எஸ்.இ., பள்ளியில் படித்த மாணவி நர்மதா, 500க்கு, 499 மதிப்பெண்கள் பெற்று இந்திய அளவில் சிறப்பிடமும், மாநில அளவில் முதலிடமும் பெற்று சாதனை படைத்துள்ளார்.அதே போன்று மாணவி இனியா, 498 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் இரண்டாம் இடம் பெற்றுள்ளார். மேலும் மாணவன் ரோகில் ஹர்ஷவர்தன், 495 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் மூன்றாம் இடம் பெற்றுள்ளார்.இந்திய அளவிலும், மாநில அளவிலும் சாதனை படைத்துள்ள மாணவ மாணவியரை, பள்ளி தாளாளர் சரவணன் மற்றும் அகா-டமிக் இயக்குனர் சச்சின் சூர்யா மற்றும் இயக்குனர்கள், முதல்-வர்கள், ஆசிரியர்கள் பரிசு வழங்கி பாராட்டினர்.சாதனை படைத்த மாணவர்களின் பெற்றோர்களையும் கவுரவித்தனர். பள்ளியில் படித்த அனைத்து மாணவர்களும் வெற்றி பெற்றதால், 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர். 490 மதிப்பெண்களுக்கு மேல், 8 மாணவர்களும், 450 மதிப்பெண்களுக்கு மேல், 140 மாணவ, மாணவியரும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்