10ம் நாள் நிறைவில் 1,19.182 காலியிடங்கள்
அண்ணா பல்கலையில் நடந்து வரும் பொறியியல் கலந்தாய்வில் 10 நாட்கள் நிறைவடைந்துவிட்டன. இதுவரை ஓசி பிரிவில் 11,094 இடங்களும், பிசிஎம் பிரிவில் 697 இடங்களும், பிசியில் 7084 இடங்களும், எம்பிசியில் 4133 இடங்களும், எஸ்சிஏ பிரிவில் 69 இடங்களும், எஸ்சியில் 929 இடங்களும், எஸ்டியில் 21 இடங்களும், எப்ஓசியில் 34 இடங்களும் நிரம்பிவிட்டன. அண்ணா பல்கலைக்கழகத்தில் 3856 இடங்களும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் 4133 இடங்களும், சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் 16,072 இடங்களும் நிரம்பிவிட்டன. மொத்தமாக 10 நாட்கள் நடைபெற்றுள்ள கலந்தாய்வில் 24,061 மாணவர்கள் பொறியியல் சேர்க்கை பெற்றுள்ளனர். தற்போது, மொத்தமாக 1,19,182 இடங்கள் காலியாக உள்ளன. இவ்விடங்களுக்கு தொடர்ந்து கலந்தாய்வு நடைபெற்று வருகிறது.