7,000 பள்ளிகளில் ஹைடெக் ஆய்வகம்
தமிழகத்தில் உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் மட்டுமே ஆய்வகங்கள் உள்ளன; நடுநிலை பள்ளிகளில் இல்லை. இதை மாற்ற, 7,000 நடுநிலை பள்ளிகளில், ஹைடெக் வசதிகளுடன் ஆய்வகங்கள், வரும் கல்வியாண்டு முதல் துவங்கப்படும். தவிர, 20,000 தொடக்க பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகளும் ஜூன் மாதம் முதல் செயல்படும்.தொடக்க, நடுநிலை பள்ளிகளில் பணிபுரியும், 80,000 ஆசிரியர்களுக்கு இன்டர்நெட் வசதியுடன் டேப்லெட், கம்ப்யூட்டர்கள் வழங்கப்படும் என தொடக்க கல்வி இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.