உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / இரண்டு ஆண்டுகளில் 4வது செயலர்: கலகலக்குது கல்வித்துறை

இரண்டு ஆண்டுகளில் 4வது செயலர்: கலகலக்குது கல்வித்துறை

மதுரை: கல்வித்துறையில், 2023 முதல் தற்போது வரை மூன்று செயலர்கள் மாற்றம் செய்யப்பட்டு, நான்காவதாக சந்திரமோகன் நியமிக்கப்பட்டு உள்ளார். ஒரு துறையின் உச்ச பதவி இவ்வாறு அடிக்கடி மாற்றம் செய்யப்படுவதால், அந்தந்த அதிகாரிகள் சிந்தனைக்கு ஏற்ப பின்பற்றப்படும் திட்டச் செயல்பாடுகளின் மாற்றம் குழப்பத்தை ஏற்படுத்தும்.'சுகாதாரமும், கல்வியும், தி.மு.க.,வின் இரு கண்கள்' என, முதல்வர் ஸ்டாலின் அடிக்கடி தெரிவித்து வருகிறார். ஆனால், கல்வி துறைகளில் தான் பாலியல் புகார்கள் உட்பட பல்வேறு சர்ச்சைகள் கிளம்புகின்றன. குறிப்பாக, கிருஷ்ணகிரி, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில், பள்ளி மாணவியர் மீதான பாலியல் வன்கொடுமை சம்பவங்களுக்கு, பதில் அளிப்பதில் ஆளுங்கட்சி திணறி வருகிறது.இந்நிலையில், இத்துறையின் உச்ச பதவிக்கு தகுதியான அதிகாரிகளை நியமனம் செய்ய வேண்டும் என்ற நெருக்கடியில் தான், இவ்வாறு அதிகாரிகள் மாற்றம் நடக்கிறதா என்று, கல்வியாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர். கடந்த 2023ல் இத்துறை செயலராக இருந்த காக்கர்லா உஷாவிற்கு பின், குமரகுருபரன் சில மாதங்களிலும், அதற்கு பின் பொறுப்பேற்ற மதுமதி சில மாதங்கள் மட்டுமே பதவி வகித்த நிலையில் மாற்றப்பட்டனர்.இதற்கிடையே, காக்கர்லா உஷா செயலராக இருந்த போது, ஐ.ஏ.எஸ்., அந்தஸ்தில், 'கல்வித்துறை கமிஷனர்' பதவி உருவாக்கப்பட்டு அதில் நந்தகுமார் நியமிக்கப்பட்டார். இவரது இடமாற்றத்திற்கு பின், அந்த கமிஷனர் பதவியும் நீக்கப்பட்டது. அந்த வகையில் இத்துறையில் முக்கிய முடிவுகள் மேற்கொள்ளும் நான்கு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மாற்றப்பட்டு, தற்போது சந்திரமோகன் புதிய செயலராக நியமிக்கப்பட்டு உள்ளார். இதுகுறித்து ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது: ஒரு துறையில் இதுபோன்ற செயலர்கள் மாறும் போது, அதுவரை அந்த துறையில் பின்பற்றப்பட்ட சில நடைமுறைகளில் அடிமட்டம் வரை மாற்றம் ஏற்படும். புதிய அதிகாரி நியமித்து அவரது வழிகாட்டுதல்களை பின்பற்றும் வரை, திட்டச் செயல்பாடுகளில் தேக்கம் ஏற்படும்.தற்போது இடைநிலை ஆசிரியர்களுக்கான சம்பள முரண்பாடு, ஆசிரியர் தகுதி தேர்வு உண்டா இல்லையா என்ற பிரச்னை, அதுதொடர்பான நீதிமன்ற வழக்குகள், ஆசிரியர்கள், மாணவர்கள் சார்ந்த நீண்டகாலம் தீர்க்கப்படாத பிரச்னைகள் என, ஏராளம் உள்ளன. ஒரு செயலர் ஓராண்டாவது நீடித்தால் மட்டுமே, இதுபோன்ற பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்க வாய்ப்பு ஏற்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

kannan sundaresan
பிப் 12, 2025 15:11

அமைச்சர்கள் சரியாக இருந்தால், ஆரம்ப கல்வி முதல் உயர்கல்வி வரை அனைத்தும் சிறப்பாக இருக்கும். இங்கு அது இல்லை என்பதைத்தான் காட்டுகிறது.


c.mohanraj raj
பிப் 12, 2025 08:11

விடியலில் மக்களுக்கு என்றுதான் முடியுமோ எங்கும் கமிஷன் எதிலும் கமிஷன்


ராமகிருஷ்ணன்
பிப் 12, 2025 07:15

கமிஷன் கரெக்டா கொடுத்தா இட மாற்றம் தர மாட்டார்கள். நடப்பது விடியல் அரசு யோசித்து பாருங்க


கி ராஜராஜேஸ்வரி நன்மங்கலம்
பிப் 12, 2025 07:02

கல்வி துறையில் தகுந்த முறையில் ஆரோக்கியமான மாற்றங்களை கொண்டு வர வேண்டியது அவசியமாகிறது.முதலில் நீதி போதனை வகுப்புகள் ஒன்றாம் வகுப்பு முதல் அமல்படுத்துவது அவசியமாகிறது. மாணவர்களுக்கும் ஏன் ஆசிரியர்களுக்கும் கூட மனநல வகுப்புகள் மாதம் ஒருமுறை கட்டாயம் நடத்தப்பட வேண்டும்.பெண் குழந்தைகளிடம் முறையின்றி நடந்து கொள்ளும் ஆசிரியர்கள் எங்கும் பணிக்குச் செல்ல முடியாத வகையில் அவர்களின் சான்றிதழ்கள் பறிமுதல் செய்யப்பட வேண்டும். பெண் குழந்தைகள் அச்சமின்றி பள்ளி கல்லூரிகளுக்கு சென்று கல்வி பயிலும் சூழல் உருவாக்கப்பட வேண்டும்.


கிஜன்
பிப் 12, 2025 05:52

பெண்குழந்தைகள் கல்வி கற்கலாம் .... என பெண்குழந்தைகளுக்கு 100 சதவீதம் படிப்பு திட்டத்தை தந்தது திராவிட மாடல் .... முடிந்தால் இதை உ.பி ...ஹரியானா ....பீகாரில் ... அறிமுகப்படுத்தலாம் ....


ஆரூர் ரங்
பிப் 12, 2025 10:43

மீதிப் பாடங்களை //சார்// களின் மூலம் கற்றுத் தருவதும் அதே மாடல்கள்தான்.


JAYACHANDRAN RAMAKRISHNAN
பிப் 12, 2025 05:35

பாலியல் சீண்டல்கள் இந்து மதம் சார்ந்த பெண்கள் குழந்தைகளுக்கு எதிராகவே அதிகம் நடக்கிறது. திராவிட கட்சிகள் தமிழகத்தை விட்டு ஒழித்தால் தான் இதற்கு ஒரு தீர்வு கிடைக்கும். குழந்தைகள் கல்வியில் ஆன்மீகம் மற்றும் Human Values பாடம் கட்டாயம் சேர்க்க வேண்டும். ரியாலிட்டி ஷோ என்ற பெயரில் தொலைக்காட்சிகளில் குழந்தைகளை வைத்து சூப்பர் சிங்கர் ஷோ என்ற பெயரில் சினிமா காதல் பாடல்கள் இரட்டை அர்த்தம் தொனிக்கும் பாடல்கள் பாட வைக்கும் பெற்றோர் நடுவர்கள் என்ற பெயரில் காசுக்காக குழந்தைகளை நாசம் செய்யும் சினிமா பாடல் கூத்தாடிகள் அதனை தயாரித்து கொடுக்கும் நிறுவன முதலாளி முதல் தொழிலாளி வரை ஒளிபரப்பி காசு பார்க்கும் தொலைக்காட்சி உயர் அதிகாரி முதல் கடை நிலை ஊழியர் வரை அனைவரையும் போக்ஸோ சட்டத்தின் கீழும் குண்டர் சட்டத்திலும் விசாரணையின்றி குறைந்தது ஜந்து ஆண்டுகள் சிறையில் அடைக்க வேண்டும்.