உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / நடிகை தொடர்ந்த பாலியல் புகார்கள்: சிக்கலில் சீமான்

நடிகை தொடர்ந்த பாலியல் புகார்கள்: சிக்கலில் சீமான்

நடிகை விவகாரமும், பாலியல் வன்கொடுமை புகாரும், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. நிவாரணம் தேடி நீதிமன்றம் போனவருக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. 'செய்த குற்றங்கள் சிறியவை அல்ல' என்று நீதிமன்றமே கூறி, வழக்கில் இருந்து அவரை விடுவிக்க மறுத்து விட்டது.சீமான் மனு தள்ளுபடி செய்யப்பட்ட தகவல் மட்டுமே செய்தியாக வலம் வந்த நிலையில், சீமான் குறித்த நீதிபதியின் கடுமையான விமர்சனம் தற்போது வெளியாகி உள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=2iw05pi9&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0திராவிட கட்சிகளுக்கு தன்னை மாற்றாக கூறி வந்த சீமான், தொடர்ந்து தனித்து போட்டியிட்டு, தேர்தல்களில் தோல்வியை தழுவி வருகிறார். ஆனாலும், தனக்கென தனி ஆதரவு வட்டத்தை கட்டமைத்து, கட்சி நடத்தி வருகிறார்.இந்நிலையில், சினிமாவில் அவரோடு நடித்த விஜயலட்சுமி என்பவர், சீமானுக்கு எதிராக பாலியல் புகார் கூறினார். அதாவது, திருமணம் செய்து கொள்வதாக கூறி, சீமான் வன்புணர்வு செய்ததோடு, ஏமாற்றி ஏராளமான பணத்தையும் பறித்துக் கொண்டதாகத் தெரிவித்தார். ஆரம்பத்தில் அதை அலட்சியம் செய்த சீமான், பின், நடிகை விஜயலட்சுமியை அழைத்துப் பேசி சரிக்கட்டினார். ஆனால், சமரச நிபந்தனைகளின்படி சீமான் நடந்து கொள்ளாததால் கோபமான நடிகை, அடிக்கடி பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தியும், வீடியோ பதிவு வெளியிட்டும், சீமான் மீது குற்றச்சாட்டுக்களை அடுக்கி வந்தார். சென்னை வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தில், சீமான் மீது பாலியல் புகார் கொடுத்தார். வழக்கு பதிவு செய்யப்பட்டதும், விஜயலட்சுமிக்கு துாது அனுப்பிய சீமான், அவருக்கு அரசியல் ரீதியாக அழுத்தம் கொடுத்து, புகாரை வாபஸ் பெற செய்தார். ஆனால், புகாரை வாபஸ் பெறுவதாக விஜயலட்சுமி எழுதிய கடிதம், வளசரவாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கைக்கு கிடைக்காததால், அவர் வழக்கை தொடர்ந்து விசாரித்து, குற்றப்பத்திரிகை தயார் செய்யும் கட்டத்துக்கு சென்று விட்டார். இதை அறிந்ததும், உயர் நீதிமன்ற படியேறினார் சீமான். தன் மீதான வழக்கை ரத்து செய்ய மனுத்தாக்கல் செய்தார். நீதிபதி இளந்திரையன் அதை தள்ளுபடி செய்து, 12 வாரங்களுக்குள் சீமான் மீது குற்றப்பத்திகை தாக்கல் செய்ய உத்தரவிட்டார். சீமான் மீதான குற்றச்சாட்டுகள் சாதாரனமானவை அல்ல என்பதால், புகார் கொடுத்தவரே திரும்ப பெற்றாலும், வழக்கு விசாரணை தொடர்ந்து நடக்கும் என நீதிபதி கண்டிப்புடன் தெரிவித்துள்ளார். இது, சீமானுக்கு அரசியல் ரீதியாகவும், சமூக ரீதியாகவும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஆகியோரை கடுமையாக விமர்சித்து வரும் சீமான், அதிகரித்து வரும் போதை கலாசாரம், பாலியல் வன்கொடுமைகள், போக்சோ வழக்குகள் குறித்து பலமான வாதங்களால் அரசை வறுத்தெடுக்கிறார். ஆனால், 'சீமான் மீது விஜயலட்சுமி கூறியிருக்கும் புகாரை பாலியல் வன்புணர்வு வழக்காகவே பார்க்க முடியும்' என, உயர் நீதிமன்றமே கூறியிருப்பதால், நாட்டில் நடக்கும் பாலியல் வன்கொடுமை குறித்து பேசுவதற்கு தகுதி இல்லாத நபராக சீமானின் பிம்பம் சிதைந்துள்ளது. பெண்களை மதிக்கும் முதல் நபராக தன்னை காட்டிக் கொண்டும், 33 சதவீதம் என்ன, 50 சதவீதம் ஒதுக்கீடு தருகிறேன் என்று தன்னுடைய வேட்பாளர்களாக பாதிக்கு பாதி பெண்களை நிறுத்தியும் அரசியல் செய்த சீமான், இந்த சிக்கலை எப்படி எதிர்கொள்வது என, புரியாமல் குழப்பத்தில் இருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறின. விஜயலட்சுமி புகாரின் பின்னணியில், தி.மு.க., இருப்பதாக சொல்லி சமாளித்து வந்த சீமானால், இனி அந்த வாதத்தையும் முன்வைக்க முடியாது என அவர்கள் கருதுகின்றனர். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

nv
பிப் 23, 2025 20:24

சீமான் செய்த ஒரே நல்ல விஷயம் திருட்டு பெரியாரை தோல் உரித்துக் காட்டியது தான். மற்றபடி இவர் ஒரு தேச விரோதி இவரை நாடு கடத்துவது நல்லது


Subburamu Krishnasamy
பிப் 23, 2025 14:20

Seeman and Joseph Vijay are not social reformers. They want to encash their popularity to gain power in politics and they are exploiting the sentiments of language religion, poverty etc


Ganapathy
பிப் 23, 2025 13:41

உண்மையான ....


Sridhar
பிப் 23, 2025 12:26

இந்த ரெண்டு கரகாட்ட கோஷ்டிகளும் இப்படி ஒன்னை ஒன்னு அடித்துக்கொண்டு ரெண்டுமே அழிந்தால், தமிழகத்துக்கு மறுவாழ்வு வரும். இதேபோல் கொஞ்சம் கூட அரசியல் அனுபவமோ கொள்கை தெளிவுகளோ இல்லாத சினிமா நடிகர்களும் அரசியலிலிருந்து அப்புறப்படுத்தபட்டால், தமிழகம் அருவருப்பிலிருந்து மீளலாம். நடக்குமா?


Oviya Vijay
பிப் 23, 2025 10:36

என்னுடைய கணிப்பு பொய்க்கவில்லை என்பதற்கு இதுவும் ஒரு சாட்சி... பல காலமாக நான் தொடர்ந்து கூறிக்கொண்டு வருகிறேன். இவரது தொம்பிகள் அனைவரும் ஒவ்வொருவராக கழண்டு கொண்டே வருகின்றனர். விஜயலக்ஷ்மி இவர் மீது தொடுத்த வழக்கு ஒவ்வொரு கட்டமாக இவருக்கு சாதகம் இல்லாமல் நகர்ந்து கொண்டிருக்கிறது. ஆதலால் கட்சி கூடிய விரைவில் கலகலக்கும் என்று பலமுறை பதிவிட்டுள்ளேன்... நாதக யின் அஸ்தமனம் என்றைக்கோ ஆரம்பித்து விட்டது... தலைமையே பெண்கள் விஷயத்தில் வீக் என்று தெரிந்த பின் இனிமேலும் இவருடன் தொடர்ந்து நடைப்போட்டு தங்கள் பெயரையும் கெடுத்துக் கொள்ள யார் விரும்புவர்... கூடிய விரைவில் விஜயலக்ஷ்மியுடன் சமரசம் செய்து கொள்வார். இல்லையேல் சிறையில் கம்பி எண்ணுவார்... பெயர் கெட்டது கெட்டது தான். கட்சி மீண்டு எழ இனியும் வாய்ப்பில்லை... வீராப்பாக இதுவரை நிருபர்களிடம் பேசிக்கொண்டிருந்த சீமானுக்கு இனி அதே நிருபர்களைப் பார்த்தாலே தெறித்து ஓடும் நிலை... அந்தோ பரிதாபம்... ஆடி அடங்கும் வாழ்க்கையடா...


தர்மராஜ் தங்கரத்தினம்
பிப் 23, 2025 21:28

இதுல ஊகிக்க எதுவுமே இல்ல ..... எல்லா ஊ ஊ பீ யி ஸ் க்கும் தெரிந்த உண்மை எதிர்ப்பு வாக்குகளைப் பிரிப்பதற்காக தங்களது கழகத்தால் முதலில் இறக்கப்பட்டவர் இந்த மனிதர்தான் ..... விசை சோசப்புவை களமிறக்கிய பிறகு நாம் டம்ளருக்கு அவசியம் இல்லாம போச்சு .... இனிமே நீயாவே ஒதுங்கிரு என்று எஜமான கழகம் அன்பாக எச்சரித்த பின்னரும் ஒதுங்கலை .... அதனால் பாஜகவின் பி டீம் என்று கதை கட்டியது உனது கழகம் .... அப்படியும் ஒதுங்காததால் உடைப்பு நடக்கிறது ....


naranam
பிப் 23, 2025 10:27

தமிழ் நாட்டுத் தந்தையார் பேச்சை அப்படியே கடைபிடித்து விட்டாரோ இவர்?


ஆரூர் ரங்
பிப் 23, 2025 10:14

மாற்றான் தோட்டத்து மல்லிகையை வாசனை பிடித்த நபர் ஆளவில்லையா?.


ஆரூர் ரங்
பிப் 23, 2025 09:34

காட்டிய வழியில் நடந்து கொண்டு அவர் கூறியவற்றையே எதிர்த்துப் பேசலாமா?


முருகன்
பிப் 23, 2025 05:04

நல்லவர் வேஷம் சில காலம் மட்டுமே பெரியாரை பேசிய பேச்சுக்கு சட்டம் தான் கடமையை செய்ய வேண்டும்


sri
பிப் 23, 2025 07:13

ராமசாமி நாயக்கர் பற்றிய விமர்சனம் சரியான ஒன்றுதான். இன்று ராமசாமி நாயக்கரை முன்நிறுத்தி திராவிட மாடல் அரசியல்வாதிகள் செய்யும் வியாபாரத்தை தோல் உரித்து காட்டும் ஒரே தமிழர் சீமான் என்பதில் ஐயமில்லை


கண்ணன்,மேலூர்
பிப் 23, 2025 08:30

இந்த விஜயலெட்சுமி கேஸ்லயாவது சைமனை பிடித்து சிறையில் அடைக்க வேண்டும் அப்பதான் இவர் அடங்குவார். வர வர இவர் ஆட்டமும் வாயும் அதிமாகிக் கொண்டே போகிறது.


நிக்கோல்தாம்சன்
பிப் 23, 2025 08:33

பெரியார் செய்யாததையா சீமான் செய்துவிட்டார் என்றும் கேள்வி எழும் ,


புதிய வீடியோ