உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / பொன்முடிக்கு மீண்டும் து.பொ.செயலர் பதவி; கணக்கு போட்டு காய் நகர்த்தும் தி.மு.க.,

பொன்முடிக்கு மீண்டும் து.பொ.செயலர் பதவி; கணக்கு போட்டு காய் நகர்த்தும் தி.மு.க.,

சென்னை: ஹிந்து மதம் குறித்து சர்ச்சையாக பேசியதால், அமைச்சர் பதவியை இழந்ததுடன், கட்சி பதவியில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு, மீண்டும் கட்சி பதவி வழங்கப்பட்டுள்ளது. அவருக்கும், அமைச்சர் சாமிநாதனுக்கும், கட்சியில் துணை பொதுச்செயலர் பதவி வழங்கப்பட்டு உள்ளது. தி.மு.க.,வின் மூத்த அமைச்சராக இருந்த பொன்முடி, பெண்களுக்கான இலவச பஸ் பாஸ் குறித்து பேசும்போது, 'ஓசி பயணம்' என குறிப்பிட்டது, கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=jtaalfm7&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அதன்பின், ஹிந்து மதம் குறித்து ஆபாசமாக பேசினார். இதனால், பல தரப்பில் இருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதை தொடர்ந்து, அவரிடம் இருந்து கட்சியின் துணை பொதுச்செயலர் மற்றும் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டன. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சட்டசபை தொகுதிகளில், தேர்தல் செலவை முழுமையாக பொன்முடி ஏற்றுக் கொள்வார் என்பதாலும், அவருக்கு மீண்டும் கட்சியில் துணை பொதுச்செயலர் பதவி வழங்கப்பட்டுஉள்ளது. உடையார் இனத்தைச் சேர்ந்தவர் என்பதால், உடையார் இனத்தவர் தி.மு.க.,வுக்கு ஆதரவாக தேர்தலில் செயல்படுவர் என்ற கணக்கிலும் அவருக்கு பதவி மீண்டும் வழங்கப்பட்டுள்ளது. கொங்கு மண்டலத்தில் அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி வலுவாக இருக்கிறது. அக்கூட்டணியில் த.வெ.க.,வும் இணைந்தால், தி.மு.க.,வுக்கு பின்னடைவு ஏற்படும். எனவே, கொங்கு மண்டலத்தில் தி.மு.க.,வை பலப்படுத்தவும், வெள்ளாளர் கவுண்டர் சமுதாயத்திற்கு முக்கியத்துவம் வழங்கவும் தி.மு.க., தலைமை திட்டமிட்டது. ஏற்கனவே, வெள்ளாள கவுண்டர் சமுதாயத்தைச் சேர்ந்த சுப்புலட்சுமி, துணை பொதுச்செயலர் பதவியை ராஜினாமா செய்து விட்டதால், அவரது பதவி காலியாகவே இருந்தது. எனவே தான், கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த அமைச்சர் சாமிநாதனுக்கு, துணை பொதுச்செயலர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து தி.மு.க., பொதுச்செயலர் துரைமுருகன் அறிக்கை: பொன்முடி, சாமிநாதன் ஆகியோர் தி.மு.க., துணை பொதுச்செயலர்களாக நியமிக்கப்படுகின்றனர். திருப்பூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக பணியாற்றி வந்த சாமிநாதன், துணை பொதுச்செயலராக நியமிக்கப்பட்டதால், அவருக்கு பதிலாக, திருப்பூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக பத்மநாபன் நியமிக்கப்பட்டுள்ளார். திருப்பூர் தெற்கு மாவட்டச் செயலர் பதவி வகித்து வந்த பத்மநாபன், திருப்பூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டதால், அவருக்கு பதிலாக, திருப்பூர் தெற்கு மாவட்ட பொறுப்பாளராக ஈஸ்வரசாமி எம்.பி., நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

பாரத புதல்வன்
நவ 05, 2025 17:24

தி மு க வை அழிக்கும் தகுதி இவருக்கு மட்டுமே உள்ளது.


என்றும் இந்தியன்
நவ 05, 2025 17:10

து. பொ . செ து - துண்டு எலும்புத்துண்டு பொ - பொறுக்கும் தொழில் செ - செய்பவர். இப்படிப்படித்தால் சரியான அர்த்தம் வரும்.


duruvasar
நவ 05, 2025 16:03

செம்மண் சேவை களிமண்ணுக்கு தேவை


chandran
நவ 05, 2025 15:48

விழுப்புரம் மாவட்டத்தில் வன்னியர்கள் அதிகம் உடையார் சமூக பொன்ஸ் தன் ஜாதிகாரனுலளுக்கு மட்டுமே சலுகை செஞ்சது வன்னிய மாக்களுக்கு புரிஞ்சிதான் விழுப்புரத்திலிருந்து துரத்தி அடிக்கப்பட்டு திருக்கோவிலூர் மக்களை ஏமாற்றி வருகிறார் இப்போ அந்த மக்களும் இவரை புரிஞ்சி கிட்டாங்க இனி என்ன தில்லாலங்கடி செஞ்சாலும் ஆப்பு நிச்சயம்


theruvasagan
நவ 05, 2025 10:45

சாதிகளை ஒழித்து சமூகநீதியை காக்கும் மாபெரும் இயக்கம் இது ஒண்ணுதான். எல்லாரும் ஜோரா கைதட்டுங்க.


Vasan
நவ 05, 2025 13:02

திமுகவை நன்கு புரிந்து கொண்டு உண்மையை பதிவு செய்தமைக்கு நன்றி.


kjpkh
நவ 05, 2025 10:36

என்னதான் நடக்கும் நடக்கட்டுமே. இருட்டினில் நீதி மறையட்டுமே. தன்னாலே வெளிவரும் மயங்காதே. இதெல்லாம் திமுகவின் சகஜம்ங்க.


Nanchilguru
நவ 05, 2025 10:06

கூட்டி கழித்து பார்த்தால் கணக்கு ஸிரோ வருது


Shekar
நவ 05, 2025 09:31

இவரை மட்டுமா சேர்த்தோம், எங்கள் கட்சியின் போர் வாள் சிவாஜி பேரைக்கெடுக்கும் கிருஷ்ணமூர்த்தியை சேர்க்கலையா? எங்க கட்சிக்கு அப்படி பேசுறதுதான் அடிப்படை தகுதி. ஏதாவது கோர்ட் கேஸ் அப்படின்னு வந்தா உல்லலலாயிக்கு அவங்கள பதவிவிட்டு நீக்குவோம், ஆறு மாசத்தில் மீண்டும் சேர்ப்போம்.


vbs manian
நவ 05, 2025 09:29

பொது வாழ்வில் கண்ணியம் நேர்மை நாணயம் ஒழுக்கம் இவையெல்லாம் தேவையில்லை என்று கழகம் நினைத்து காற்றில் பறக்க விடுகிறது.


ராமகிருஷ்ணன்
நவ 05, 2025 09:17

ஏற்கனவே திமுகவினர் பேசிய இந்துவிரோத பேச்சுகளை எல்லா இந்திய மொழி களில் மொழி பெயர்த்து பி ஜே பி இந்தியா முழுவதும் பரப்பி வருகின்றனர். முக்கியமாக தற்போது பொன்முடியின் ஆபாச இந்து விரோத பேச்சுகளை வட இந்திய மாநிலங்களில் பரப்பி இண்டி கூட்டணியின் பெரும் தோல்விக்கு பயன்படுத்த வேண்டும்


முக்கிய வீடியோ