வாசகர்கள் கருத்துகள் ( 1 )
என்ன செய்வது என்று தெரியாமல் சபாநாயகர் திணறல். மதில் மேல் பூனை போல தான்.
சென்னை: சென்னை ஆயிரம்விளக்கு தொகுதியில், அவ்வை சண்முகம் சாலை, எஸ்.எஸ்.புரம் ஆகிய பகுதிகளில், சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் நேற்று ஆய்வு செய்தார். அப்போது, அவர் அளித்த பேட்டி: ஆயிரம்விளக்கு தொகுதியில், ஆயிரம் பணிகள் செய்ய வேண்டியுள்ளது. ஏராளமான பிரச்னைகள் உள்ளன. இங்கு, ஒரு மாதத்திற்குள் தற் காலிக சாலை அமைக்கப்படும். விளையாட்டு மைதானங்களில், தேவையான வசதிகள் ஏற்படுத்தி தரப்படும். பொதுநலச் சங்கங்களை இணைத்து, மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்படுத்தப்படும். அமைச்சரவை விரிவாக்கத்தில், எப்போது எதை செய்ய வேண்டும் என்பது, முதல்வருக்கு நன்றாக தெரியும். அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் விவகாரத்தில், இரு தரப்பினரும் மனு அளித்துள்ளனர். அதில், உரிய நேரத்தில் உரிய முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
என்ன செய்வது என்று தெரியாமல் சபாநாயகர் திணறல். மதில் மேல் பூனை போல தான்.