வாசகர்கள் கருத்துகள் ( 4 )
நான் 2.1 கிலோவாட் சூரிய மின்தகடுகள் 2024 ஏப்ரல் மாதத்தில் நிறுவினேன். தமிழக மின்வாரியம் ஜுன் மாதத்தில் இருந்துதான் செயல்பாட்டுக்கு கொண்டு வந்தனர். நெட்வொர்க் கட்டணமாக ரூபாய் 289 கட்டணம் செலுத்தி வருகிறேன். அதாவது 3 கிலோ வாட் என்று கணக்கீடு செய்து 922 யூனிட்டுக்கு பணம் ரூபாய் 289 வசூலிக்கிறார்கள். உற்பத்தி ஆவதோ 600 யூனிட் தான். ஆனால் பிக்ஃசட் யூனிட்டாக 922 க்கு நெட்வொர்க் கட்டணம் வசூலிக்கிறார்கள். இது பகல் கொள்ளை.
அரசு மின்சாரம் வெளியில் காற்றாலைகளில் இருந்து அதிக விலைக்கு வாங்குகின்றது .அந்த மின்சாரத்திற்கு காற்றாலைகள் நெட்ஒர்க் கட்டணம் செலுத்துவது இல்லை .ஏன் தனிநபர் கொடுக்கும் மின்சாரத்திற்கு பணமும் கொடுப்பதில்லை ,மாற்றாக மின்சாரம் கொடுப்பவர்களே நெட்ஒர்க் கட்டணம் கட்டவேண்டும் .இலவசமாக மின்சாரம் கொடுப்பவர்களே பணமும் கொடுக்கவேண்டும் .என்ன லாஜிக் என்று தெரியவில்லை. மாற்றாக நெட் மீட்டரிங் சிஸ்டம் கொண்டுவந்தால் பெருமளவு மக்கள் சோலார் மின்தகடு பொருத்தி மிகுதியாக மின்னுற்பத்தி செய்து அரசுக்கு விநியோகம் செய்தால் அரசு குறைந்தவிலை கொடுக்கலாம் .அவர்களுக்கு இலவச மின்சாரமோடு சிரிது பணவரவும் கிடைக்கும். அரசு சிந்திக்கவேண்டும் .
சோலார் தகடுகளை மின்வாரியமே இலவசமாக வழங்க வேண்டும்.
2024 தேர்தலுக்கு முன்னர் இந்த திட்டத்தின் கீழ் எனது வீட்டில் சோலார் மின்உற்பத்தி செய்ய விண்ணப்பித்தேன். தேர்தல் முடிந்த பின்னர் இரண்டு மாதம் கழித்து தமிழக மின் துறைக்கு ரூபாய் 4,500 கட்டணம் செலுத்தி அனுமதி பெற வேண்டும் என்று குறுஞ்செய்தி அனுப்பினார்கள். போங்கடா நீங்களும் உங்கள் திட்டமும் என்று விட்டுவிட்டேன்.