உண்டியல் உடைத்து காணிக்கை திருட்டு
புதுச்சேரி: கோவில் உண்டியல் உடைத்து திருடியவர்களை போலீசார் தேடிவருகின்றனர்.கூடப்பாக்கத்தில் உள்ள வரதராஜப் பெருமாள் கோவிலில் நேற்று முன்தினம் மாலை 6:30 மணியளவில், மர்ம நபர்கள் உண்டியலை உடைத்து காணிக்கையை திருடிச் சென்றனர்.இதுகுறித்து கோவில் நிர்வாக அதிகாரி நித்தியலட்சுமி அளித்த புகாரின் பேரில் வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து, மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.