பேனர் வைத்தவர் மீது வழக்கு பதிவு
பாகூர், : அனுமதியின்றி பேனர் வைத்தவர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.புதுச்சேரி - கடலுார் சாலை கிருமாம்பாக்கம் சந்திப்பு பகுதியில் அனுமதி இன்றி பொது மக்களுக்கு அபாயத்தை ஏற்படுத்தும் விதத்தில் பேனர் வைக்கப்பட்டு இருந்தது.தகவலறிந்த கிருமாம்பாக்கம் சப் இன்ஸ்பெக்டர் சண்முகவேல் விசாரணை நடத்தி, தடையை மீறி பேனர் வைத்த ஈச்சங்காடு கிராமத்தைச் சேர்ந்த குமரேசன், 29, என்பவர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.