மாணவர்களுக்கு சீருடை வழங்கல்
புதுச்சேரி: நெல்லித்தோப்பு, பெரியார் நகர் அரசு தொடக்கப் பள்ளியில், மாணவர்களுக்கான இலவச சீருடை மற்றும் அடையாள அட்டைகள் வழங்கும் விழா நேற்று நடந்தது. தலைமை ஆசிரியர் புவனேஸ்வரி வரவேற்றார். தொகுதி எம்.எல்.ஏ., கார்த்திகேயன் மற்றும் பள்ளி துணை ஆய்வாளர் செல்வி ஆகியோர் கலந்து கொண்டு அனைத்து மாணவர்களுக்கும் சீருடை மற்றும் அடையாள அட்டைகளை வழங்கினர். இதில், பள்ளி மேலாண்மை குழு தலைவர் ஜமாலுதீன், மீரான் பாய், ஆசிரியர்கள் பிரேமலதா, ஷர்மிளா, கிரேஸ், சகாய தீபகுமாரி, ஜெயசுதா, சத்ய கலா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.