தேசிய அளவில் சிலம்பம் போட்டி ஆல்பா பள்ளி மாணவர் சாதனை
புதுச்சேரி : தேசிய அளவில் நடந்த சிலம்பம் போட்டியில், ஆல்பா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் இரண்டாம் இடத்தை பிடித்து சாதனை படைத்தார். தேசிய அளவில் சிலம்பம் போட்டி சென்னையில் நடந்தது. இந்த போட்டியில் கலந்து கொண்ட புதுச்சேரி ஆல்பா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 8ம் வகுப்பு பயிலும் மாணவர் பவனீஷ், இரண்டாம் இடத்தை பிடித்தார். இவர் தமிழர் பாரம்பரிய வீர விளையாட்டு பயிற்சி மையத்தில் பயிற்சி எடுத்து வருகிறார். கடந்த மாதம் மாநில அளவில், வேலுாரில் நடந்த சிலம்பம் போட்டியில் முதல் பரிசு பெற்றது குறிப்பிடத்தக்கதது. சாதனை மாணவரை ஆல்பா கல்வி குழுமங்களின் இயக்குநர் தனதியாகு பாராட்டினார். மேலும், பயிற்சியாளர், பள்ளி ஆசிரியர்கள் வாழ்த்தினர்.