உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  பெண் மீது தாக்குதல்

 பெண் மீது தாக்குதல்

நெட்டப்பாக்கம்: வீட்டை காலி செய்ய வலியுறுத்தி பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த மூவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். சூரமங்கலம், மேட்டு தெருவை சேர்ந்தவர்ஜெயசுதா, 41.இவர்அதே பகுதியில் உள்ள வெண்ணிலாவுக்கு சொந்தமானவீட்டில் வாடகை இருந்து வருகிறார். இவரை வெண்ணிலா பலமுறை வீட்டை காலி செய்யுமாறு கூறியும் ஜெயசுதா வீட்டை காலி செய்யவில்லை. இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் வீட்டின் உரிமையாளர் வெண்ணிலாவின் மாமியார் சரசு, அவரது உறவினர்கள் சசிகலா, பார்வதி உள்ளிட்ட மூன்று பேர் ஜெயசுதாவை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். ஜெயசுதா புகாரின் பேரில், மடுகரை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை