உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கோரிக்கை

 ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கோரிக்கை

புதுச்சேரி: சட்டசபையில் அய்யப்பன் எம்.எல்.ஏ., பேசியதாவது: கொம்யூன் பஞ்சாயத்தில் ஆட்கள் பற்றாக்குறையை போக்க வேண்டும். பாரதியார் பல்கலை கூடத்தை கலை, அறிவியல் கல்லுா ரியாக மாற்ற வேண்டும். அரியாங்குப்பம் முதல் அரிக்கமேடு வரை ஆற்றை ஆழப்படுத்த வேண்டும். முருங்கப்பாக்கத்தில் உள்ள அரிக்கமேடு அருங்காட்சியகத்தை மீண்டும் திறக்க வேண்டும். ஆக்கிரமிக்கப்பட்டுள்ள வராக நதியை மீட்க வேண்டும். அரியாங்குப்பம் ஆரம்ப சுகாதார நிலையத்தை சமுதாய நலவழி மையமாக தரம் உயர் த்த வேண்டும். சிமெண்ட் சாலை அமைக்கும் போது குறிப்பிட்ட இடைவெளியில் மழை நீர் சேகரிப்பு ஏற்படுத்த வேண்டும். மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது ஜாதி வாரி கணக்கெடுப்பையும் எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ