உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சென்டாக் பி.எஸ்சி., நர்சிங் நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிக்க 7ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு

சென்டாக் பி.எஸ்சி., நர்சிங் நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிக்க 7ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு

புதுச்சேரி: பி.எஸ்சி., நர்சிங் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான நுழைவுத் தேர்வை எழுத விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வரும் 7ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.புதுச்சேரியில் உள்ள அரசு மற்றும் தனியார் செவிலியர் கல்லுாரிகளில் உள்ள பி.எஸ்சி., நர்சிங் அரசு ஒதுக்கீடு இடங்களுக்கு புதுச்சேரி நர்சிங் கவுன்சில் நடத்தும் பொது நுழைவு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றால் மட்டுமே பங்கேற்க முடியும். இந்த பொது நுழைவு தேர்வில் பங்கேற்பதற்கான ஆன்லைன் விண்ணப்பம் www.centacpuducherry.inஎன்ற இணையதளத்தில் கடந்த 14ம் தேதி முதல் வரவேற்கப்படுகிறது. புதுச்சேரி நர்சிங் நுழைவு தேர்வினை புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த மாணவர்கள் மட்டுமே எழுத முடியும். முதலில் சென்டாக் இணையதளத்தில் நீட் அல்லாத விண்ணப்பத்தை சமர்ப்பித்து யூ.ஜி., நீட் அல்லாத விண்ணப்ப எண் பெற வேண்டும். பிறகு அதே யூ.ஜி., நீட் அல்லாத விண்ணப்ப எண்ணை குறிப்பிட்டு சென்டாக் இணையதளத்திலேயே புதுச்சேரி நர்சிங் பொது நுழைவு விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும். நேற்று 30ம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. 1,700க்கும் மேற்பட்ட மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். ஆன்லைனில் விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடுவை ஜூன் 7 ம் தேதி வரை சென்டாக் நீட்டித்துள்ளது.சுய நிதி இடங்கள், என்.ஆர்.ஐ., ஒதுக்கீட்டு பி.எஸ்சி., இடங்கள் நீட் மதிப்பெண் அடிப்படையில் நிரப்பப்படும். இந்திரா காந்தி அரசு மருத்துவ கல்லுாரியில் உள்ள சுய நிதி இடங்கள், புதுச்சேரி, காரைக்கால் மதர் தெரசா முதுநிலை ஆராய்ச்சி நிறுவனத்தில் உள்ள சுயநிதி, என்.ஆர்.ஐ., இடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் யூ.ஜி., நீட் அல்லாத விண்ணப்பத்தை சென்டாக் இணையதளத்தில் நிரப்ப வேண்டும்.மேலும் விபரங்களுக்கு 0413-2655570 என்ற உதவி எண்ணை தொடர்பு கொள்ளவும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை