நாராயணசாமிக்கு பிறந்த நாள் வாழ்த்து
புதுச்சேரி: முன்னாள் முதல்வர் நாராயணசாமி பிறந்தநாளை முன்னிட்டு காங்., ஓ.பி.சி., மாநில தலைவர் கண்ணன் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.புதுச்சேரி மாநில முன்னாள் முதல்வர் நாராயணசாமி கடந்த 30ம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாடினார். இதையொட்டி, இந்திரா நகர் தொகுதி காங்., சார்பாக முன்னாள் முதல்வர் நாராயணசாமிக்கு ஓ.பி.சி., மாநில தலைவர் தர்மாபுரி கண்ணன் சால்வை அணிவித்து, பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.இதில், இந்திரா நகர் தொகுதி பிரதேச காங்., கமிட்டி உறுப்பினர் ராஜசேகர், தொகுதி தலைவர் மோகன், மகளிர் அணி சுகுணா மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.