திருவள்ளுவர் தினத்தில் இறைச்சி கடை மூட உத்தரவு
அரியாங்குப்பம்: திருவள்ளுவர் தினத்தில் இறைச்சி கடைகள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:திருவள்ளுவர் தினம் வரும் 15ம் தேதி, கொண்டாடப்படுகிறது. அதனையொட்டி அன்று, அனைத்து ஆடு, மாடு, கோழி, மீன், பன்றி, இறைச்சி கடைகள் மூட வேண்டும் என, உள்ளாட்சி துறை செயலகம் ஆணை பிறப்பித்துள்ளது.அதனையடுத்து, அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்திற்குட்பட்ட பகுதியில் உள்ள அனைத்து இறைச்சி கடைகளும், அன்றைய தினம் மூடப்பட்டிருக்க வேண்டும். இவ்வாறு ஆணையர் தெரிவித்துள்ளார்.