அரசு மருத்துவமனையில் மருத்துவ பயிற்சி பட்டறை
புதுச்சேரி: இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், மாநில அளவிலான நச்சுயியல் பயிற்சி பட்டறையில், மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.சுகாதாரத்துறை மற்றும் குடும்பநலத்துறை மற்றும் கதிர்காமம் இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லுாரி இணைந்து நடத்திய பயிற்சி பட்டறையில், மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார ஊழியர்கள் கலந்து கொண்டனர்.அதில், திறன் மற்றும் அவசரகால மேலாண்மை தொடர்பான பயிற்சியில், 81 சுகாதார ஊழியர்கள், 35 மருத்துவர்கள், 46 செவிலியர்களுக்குபயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சி பட்டறைநிறைவு விழாவில்,இயக்குனர் உதயசங்கருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.