உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  காரைக்காலுக்கு புதிய கலெக்டர் நியமனம்

 காரைக்காலுக்கு புதிய கலெக்டர் நியமனம்

புதுச்சேரி: காரைக்கால் கலெக்டராக இஷிதா ரதி நியமிக்கப்பட்டுள்ளார். புதுச்சேரி சப் கலெக்டராக பணியாற்றி வந்த இஷிதா ரதி, காரைக்கால் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு புதுச்சேரி மின்சக்தி கழக மேலாண் இயக்குனராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. காரைக்கால் கலெக்டராக பணியாற்றி வந்த ரவிபிரகாஷ், புதுச்சேரி மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாடு, எழுதுபொருள் மற்றும் அச்சிடுதல், முன்னாள் படைவீரர் மற்றும் தியாகிகள் நலப்பிரிவு செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். கூடுதல் பொறுப்பில் இருந்து விடுவிப்பு: இதேபோல் தேர்தல் பணி காரணமாக புதுச்சேரி கலெக்டர் குலோத்துங்கன், தலைமை தேர்தல் அதிகாரி ஜவகர் ஆகியோர் கவனித்து வந்த கூடுதல் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, புதுச்சேரி வளர்ச்சி ஆணையர் கிருஷ்ணமோகனுக்கு காடுகள் மற்றும் வனவிலங்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. தொழிலாளர் செயலாளர் சுமிதாவுக்கு அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் செயலாளர் மற்றும் இயக்குனராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. வர்த்தகம் மற்றும் தொழில் மேம்பாட்டுத்துறை செயலாளர் விக்ராந்த் ராஜாவுக்கு கூடுதலாக இந்து அறநிலையத்துறை மற்றும் வக்பு வாரிய பொது நிர்வாகி பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை புதுச்சேரி தலைமை செயலாளர் சரத்சவுகான் பிறப்பித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை