உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / செவிலியர்களுக்கு புதிய சீருடை: செவிலியர் சங்கம் வரவேற்பு

செவிலியர்களுக்கு புதிய சீருடை: செவிலியர் சங்கம் வரவேற்பு

புதுச்சேரி: புதுச்சேரி அரசு செவிலியர்களுக்கு புதிய சீருடை அறிவிக்கப்பட்டுள்ளது, எங்கள் சங்கத்தின் நீண்டகால போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி என, புதுச்சேரி அரசு செவிலியர் அதிகாரிகள் சங்க செயலாளர் ஹரிதாஸ் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை: கடந்த 30 ஆண்டுகளாக ஒரே சீருடை நடைமுறையில் இருந்தது. அரசு செவிலியர்களுக்கென தனித்துவமான, கண்ணியமான மற்றும் நவீன தொழில்முறை அடையாளத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில், சீருடையை மாற்ற வலியுறுத்தி வந்தோம். அதையடுத்து அரசு செவிலியர்களுக்கு புதிய சீருடை அறிவித்து அரசாணை வெளியாகியுள்ளது. இதற்காக நடவடிக்கை எடுத்த கவர்னர், முதல்வர், அரசு அதிகாரிகள், அரசு ஊழியர் சங்கங்களுக்கு புதுச்சேரி அரசு செவிலியர், அரசு செவிலியர் அதிகாரிகள் சங்கம் நன்றி தெரிவித்து கொள்கிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை