மேலும் செய்திகள்
மாணவி தற்கொலை போலீசார் விசாரணை
15-May-2026
பாகூர்: கிருமாம்பாக்கம் அருகே மூதாட்டி தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கிருமாம்பாக்கம் அடுத்த பனித்திட்டு, தெற்கு தெருவை சேர்ந்தவர் ஜெயலட்சுமி, 65; ஆஸ்துமா மற்றும் நீரிழிவு நோயால் அவதிப்பட்டு வந்தார். அவரது நிலைமை மோசமாகி நடக்க முடியாமல் அவதியடைந்தார். இதனால் மனவேதனையில் நேற்று முன்தினம் மதியம் வீட்டின் அருகே துாக்குப் போட்டுக் கொண்டார். அவரை மீட்டு, கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர் பரிசோதித்து அவர், இறந்ததை உறுதி செய்தார். புகாரின் பேரில், கிருமாம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்
15-May-2026