உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  பிரதமர்  பயிர் காப்பீடு திட்ட விழிப்புணர்வு முகாம்

 பிரதமர்  பயிர் காப்பீடு திட்ட விழிப்புணர்வு முகாம்

திருபுவனை: மதகடிப்பட்டில் பிரதமர் பயிர் காப்பீடு திட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது. புதுச்சேரி அரசு வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறையின் சார்பில், நடந்த முகாமை வேளாண் துணை இயக்குநர் ராஜ்குமார், துவக்கி வைத்து பயிர் காப்பீடு செய்வதன் அவசியம் குறித்து விளக்கினார். மதகடிப்பட்டு வேளாண் அலுவலர் நடராஜ், நெல்லில் பயிர் வெட்டும் சோதனை, மகசூல் கணக்கீடு, இழப்பீடு வழங்குவதன் வழிமுறைகள் குறித்து விளக்கினார். பஜாஜ் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் வட்டார அலுவலர் ரஜினிகாந்த் பயிர் காப்பீடு கையேட்டை விவ சாயிகளுக்கு வழங்கி நெல், கரும்பு, வாழை, மணிலா, உளுந்து, பச்சைப் பயறு போன்ற பயிர்களில் பயிர் காப்பீடு செய்வது குறித்து விளக்கினார். முகாமில் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை உதவி வேளாண் அலுவலர்கள் பக்கிரி, புவனேஷ்வரி, ஆத்மா தொழில்நுட்ப மேலாளர் சிரஞ்சீவி, செயல்விளக்க உதவியாளர் ஜெயசங்கர், அலுவலக ஊழியர்கள் சண்முகம், சுபாஷ் உ ள்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ