உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / இஸ்லாமிய குடு ம்பங்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கல்

இஸ்லாமிய குடு ம்பங்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கல்

புதுச்சேரி : ரம்ஜான் பண்டிகையையொட்டி, சப்தகிரி அறக்கட்டளை சார்பில், இஸ்லாமிய குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. லாஸ்பேட்டை அசோக் நகர் சமூதாய நலக்கூடத்தில், ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. சப்தகிரி அறக்கட்டளை பொறுப்பாளர் ரமேஷ்குமார் முன்னிலை வகித்தார்.சிறப்பு விருந்தினராக முன்னாள் சபாநாயகர் சிவக்கொழுந்து, இஸ்லாமியர்களுக்கு ரம்ஜான் வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து, 600க்கும் மேற்பட்ட இஸ்லாமிய குடும்பத்தினருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். நிகழ்ச்சியில், இஸ்லாமியர்கள், சப்தகிரி அறக்கட்டளை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ