மாணவர்களுக்கு சீருடை வழங்கல்
திருக்கனுார்: மண்ணாடிப்பட்டு தொகுதி கொடாத்துார் அரசு உயர்நிலைப் பள்ளியில் கல்வித்துறை மூலம் இலவச சீருடை மற்றும் தையல் கட்டணம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. பள்ளியின் தலைமை ஆசிரியர் ரூபஸ் வரவேற்றார். அமைச்சர் நமச்சிவாயம் தலைமை தாங்கி, மாணவர்களுக்கு இலவச சீருடை மற்றும் தையல் கூலி வழங்கினார். இதில், பா.ஜ., பிரமுகர் முத்தழகன், முதன்மை கல்வி அதிகாரி குலசேகரன், கொம்யூன் ஆணையர் எழில்ராஜன், கலியபெருமாள், அ.தி.மு.க., நிர்வாகி சுத்துக்கேணி பாஸ்கரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.