பாலியல் சீண்டல்: தொழிலாளி கைது
நெட்டப்பாக்கம்: சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுப்பட்டவரை போலீசார் கைது செய்தனர். மடுகரை ராம்ஜி நகரைச் சேர்ந்தவர் கார்த்திக்கேயன் 48, கூலித்தொழிலாளி. இவர் அதே பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமியிடம் கடந்த ஜனவரி 31ம் தேதி மாலை பாலியல் சீண்டலில் ஈடுப்பட்டுள்ளார். இது குறித்து சிறுமியின் தந்தை நெட்டப்பாக்கம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் நெட்டப்பாக்கம் சப் இனஸ்பெக்டர் வீரபுத்திரன் வழக்குப்பதிந்து, கார்த்திக்கேயனை கைது செய்தார்.