உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  நெல்லித்தோப்பு, முதலியார்பேட்டை ஓட்டுச் சாவடிகளில் 23ல் சிறப்பு முகாம்

 நெல்லித்தோப்பு, முதலியார்பேட்டை ஓட்டுச் சாவடிகளில் 23ல் சிறப்பு முகாம்

புதுச்சேரி: நெல்லித்தோப்பு, முதலியார்பேட்டை தொகுதியில் உள்ள அனைத்து ஓட்டுச்சாவடிகளில் சிறப்பு முகாம் வரும் 23ம் தேதி நடக்கிறது. இதுகுறித்து வாக்காளர் பதிவு அதிகாரி இஷிதா ராட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இந்திய தேர்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிர திருத்தப்பணியின் ஒரு பகுதியாக வரும் 23ம் தேதி காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை, நெல்லித்தோப்பு, முதலியார்பேட்டை தொகுதிகளுக்குட்பட்ட அனைத்துஓட்டுச்சாவடியில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த சிறப்பு முகாமில் அனைத்து வாக்காளர்களும், இதுவரை கணக்கெடுப்பு படிவங்கள் (எஸ்.ஐ.ஆர்) கிடைக்கப் பெற்றவர்கள் அதனை பூர்த்தி செய்து அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு சென்று, வாக்குச்சாவடி நிலைய அதிகாரியிடம் சமர்ப்பிக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்