உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் ராகு - கேது பெயர்ச்சி சிறப்பு பூஜை

மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் ராகு - கேது பெயர்ச்சி சிறப்பு பூஜை

புதுச்சேரி: மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் நேற்று நடந்த ராகு - கேது பெயர்ச்சி சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று பரிகார பூஜை செய்து வழிபட்டனர்.நவ கிரகங்களில் ஒன்றான ராகு பகவான் நேற்று மாலை 4:20 மணிக்கு மீனம் ராசியில் இருந்து கும்ப ராசிக்கும், கேது பகவான் கன்னி ராசியில் இருந்து சிம்ம ராசிக்கு இடம் பெயர்ந்தனர்.அதனையொட்டி, புதுச்சேரி - திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலை, மொரட்டாண்டியில் அமைந்துள்ள சனீஸ்வரர் கோவில் வளாகத்தில், 12 அடி உயர ராகு மற்றும் கேது பகவான்களுக்கு சிதம்பர கீதாராம் குருக்கள் தலைமையில் சிறப்பு பூஜை நடந்தது.அதனையொட்டி நேற்று காலை 11:00 மணிக்கு நட்சத்திர ராசி பரிகார ஹோமம் மற்றும் மகா பூர்ணாஹூதி நடந்தது. பகல் 12:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் 108 லிட்டர் பால் அபிஷேகம் நடந்தது.மாலை 4:20 மணிக்கு ராகு மற்றும் கேது பகவான்களுக்கு பஞ்சலோக ஆபரண கவசம் சாற்றி, மகா தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் பரிகார பூஜை செய்து, வழிபட்டனர்.பக்தர்களுக்கு, கடலுார் குமாரபாபா தலைமையில் அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ