உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கவுசிக பாலசுப்ரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹார விழா

கவுசிக பாலசுப்ரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹார விழா

புதுச்சேரி: புதுச்சேரி, கவுசிக பாலசுப்ரமணிய சுவாமி கோவிலில், சூரசம்ஹாரம் நேற்றிரவு நடந்தது.புதுச்சேரி ரயில் நிலையம் எதிரே உள்ள வள்ளி தெய்வானை உடனுறை கவுசிக பாலசுப்ரமணிய சுவாமி கோவிலில், 72ம் ஆண்டு கந்தர் சஷ்டி சூரசம்ஹாரம், திருக்கல்யாண உற்சவம் கடந்த 1ம் தேதி விநாயகர் பூஜையுடன் துவங்கியது. அதனையொட்டி, தினமும் சுவாமி பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடந்தது. முக்கிய நிகழ்வாக, நேற்று முன்தினம் இரவு வேல் வாங்குதல், சிங்கமுகன் சம்ஹாரம் நடந்தது. தொடர்ந்து, நேற்று இரவு 8:00 மணிக்கு சூரசம்ஹாரம் நடந்தது. இதில், திராளன பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.இன்று காலை 9:00 மணிக்கு சுவாமி திருக்கல்யாண உற்சவமும், 12ம் தேதி வேதபுரீஸ்வரர் கோவில் குளத்தில் தெப்பல் உற்சவமும், 19ம் தேதி ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ