ஜென்மராக்கினி அன்னை ஆலய ஆடம்பர தேர்பவனி
புதுச்சேரி: புதுச்சேரி ஜென்மராக்கினி அன்னை ஆலயத்தில் ஆடம்பர தேர்பவனி நடந்தது.புதுச்சேரி மிஷன் வீதியில் புனித ஜென்மராக்கினி அன்னை பேராலயம் உள்ளது. இதில், 333வது ஆண்டு பெருவிழா கடந்த 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. பெருவிழாவினை முன்னிட்டு நாள்தோறும் காலை, மாலை திருப்பலி மற்றும் சிறிய தேர்பவனி நடந்தது.விழாவின் முக்கிய நிகழ்வான ஆடம்பர தேர்பவனி நேற்று இரவு நடந்தது. முன்னதாக காலை 6:30 மணி அளவில் புதுச்சேரி - கடலுார் மறைமாவட்ட பேராயர் பிரான்சிஸ் கலிஸ்ட் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது. 11:00 மணிக்கு பாகூர் பங்குத்தந்தை அல்போன்ஸ் சந்தனம், நெய்வேலி உதவி பங்குத் தந்தை அருள் புஷ்ப ராஜா தலைமையில் சிறப்பு திருப்பலி, மாலையில் பேராலய பங்கு தந்தை ரொசாரியோ தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது.இரவில் மின் விளக்கு அலங்காரத்தில் புனித ஜென்மராக்கினி அன்னை தேர்பவனி நடந்தது. திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.