கருவூலக துறை அதிகாரி முதல்வரிடம் வாழ்த்து
புதுச்சேரி : இந்திராகாந்தி மருத்துவ கல்லுாரியில் நிதி அதிகாரி யாக பொறுப்பேற்றுக் கொண்ட உதயசங்கர் முதல்வர் ரங்கசாமியிடம் வாழ்த்து பெற்றார். ஓய்வுபெற்ற கணக்கு மற்றும் கருவூலக இயக்குநர் உதயசங்கர், புதுச்சேரி கதிர்காமம் இந்திரா காந்தி மருத்துவ கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் நிதி அதிகாரியாகவும், கணக்கு மற்றும் கருவூலக துறையில் சிறப்பு அதிகாரியாகவும் நேற்று காலை பதவி ஏற்றுக் கொண்டார். அதையடுத்து அவர் சட்ட சபையில் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.