மேலும் செய்திகள்
சட்டவிரோதமாக குடியேறுபவர்களை தடுப்பது நமது பொறுப்பு; மத்திய அரசு
2 hour(s) ago | 1
புதுச்சேரி : மது குடித்ததை வீட்டில் உள்ளவர்கள் தட்டி கேட்டதால் மனமுடைந்த டைலர் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். லாஸ்பேட்டை பெத்துசெட்டிபேட்டை, பாவேந்தர் வீதியை சேர்ந்தவர் விஜயசங்கர், 51; இவர் டைலர் வேலை செய்தார். இவர் தினமும் மது குடித்தை, அவரது மனைவி, மகன் தட்டிக் கேட்டனர். இதனால் மனமுடைந்த அவர், நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், வீட்டு மொட்ட மாடி அறையில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இது குறித்து, அவரது மகன் மணிகண்டன் கொடுத்த புகாரின் பேரில், லாஸ்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
2 hour(s) ago | 1