உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  பைக் மோதி தொழிலாளி பலி

 பைக் மோதி தொழிலாளி பலி

புதுச்சேரி: சைக்கிள் மீது பைக் மோதியதில் படுகாயமடைந்த சமையல் தொழிலாளி சிகிச்சை பலனின்றி இறந்தார். நைனார்மண்டபம், குயவர் வீதியை சேர்ந்தவர் சிவபிரகாசம், 60; சமையல் வேலை செய்து வந்தார். இவரது மனைவி சுசீலா 3 ஆண்டுகளுக்கு முன் இறந்த நிலையில், அவரது 2 மகள்களும் திரு மணமாகி சென்றுவிட்டனர். தனியாக வசித்து வந்த சிவபிரகாசம் கடந்த 24ம் தேதி சைக்கிளில் மேட்டுப்பாளையத்தில் இருந்து வீட்டிற்கு சென்றுக் கொண்டிருந்தார். அப்போது, பெட்ரோல் பங்க் அருகே பின்னால், அதிவேகமாக வந்த அடையாளம் தெரியாத பைக், சிவபிரகாசம் சைக்கிள் மீது மோதியது. அதில் படுகாயமடைந்த சிவபிரகாசத்தை அருகில் இருந்தவர்கள் மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து வடக்கு போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை