ஸ்குவாஷ்: பைனலில் ஜோஷ்னா
சென்னை: சர்வதேச ஸ்குவாஷ் தொடரின் பைனலுக்கு இந்தியாவின் ஜோஷ்னா சின்னப்பா, அனாஹத் சிங் முன்னேறினர்.சென்னையில், 'இந்தியன் டூர்-4' சர்வதேச ஸ்குவாஷ் தொடர் நடக்கிறது. பெண்களுக்கான அரையிறுதியில் இந்தியாவின் ஜோஷ்னா சின்னப்பா 39, தான்வி கண்ணா 29, மோதினர். இதில் ஜோஷ்னா 3-2 (6-11, 12-10, 11-1, 5-11, 11-5) என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.மற்றொரு அரையிறுதியில் இந்தியாவின் அனாஹத் சிங் 17, தென் ஆப்ரிக்காவின் ஹேலி வார்டு மோதினர். இதில் அனாஹத் 3-0 (11-8, 11-6, 11-4) என வெற்றி பெற்றார். பைனலில் ஜோஷ்னா, அனாஹத் மோதுகின்றனர்.ஆண்களுக்கான அரையிறுதியில் இந்தியாவின் வேலவன் செந்தில்குமார் 27, பிரான்சின் மாசியோ லேவி மோதினர். இதில் வேலவன் 3-1 (13-11, 11-9, 5-11, 11-7) என்ற கணக்கில் வெற்றி பெற்றார். பைனலில் வேலவன், எகிப்தின் ஆடம் ஹவால் மோதுகின்றனர்.