மேலும் செய்திகள்
ஆசிய கூடைப்பந்து: இந்தியா அபாரம்
26-Mar-2025
புனே: பெண்கள் அணிகளுக்கான 'பில்லி ஜீன் கிங்' கோப்பை சர்வதேச டென்னிஸ் தொடரின் 62வது சீசன் தற்போது நடக்கிறது. இந்தியாவின் புனேயில் ஆசிய, ஓசியானா மண்டல பிரிவு போட்டி நடக்கிறது. இந்திய அணி, குரூப் ஏ-ல், தென் கொரியா, தாய்லாந்து, நியூசிலாந்து, ஹாங்காங், சீன தைபே அணிகளுடன் இடம் பெற்றுள்ளது.முதல் போட்டியில் நியூசிலாந்திடம் (1-2) தோற்ற இந்தியா, அடுத்து தாய்லாந்தை (2-1) என வீழ்த்தியது. நேற்று தனது மூன்றாவது போட்டியில் இந்திய அணி, ஹாங்காங்கை சந்தித்தது.முதலில் நடந்த ஒற்றையர் போட்டியில் இந்தியாவின் வைதேகி சவுத்ரி, ஹாங்காங்கின் ஹோ சிங் உ மோதினர். இதில் வைதேகி 7-6, 6-1 என எளிதாக வெற்றி பெற்றார்.இரண்டாவது ஒற்றையரில் இந்தியாவின் ஸ்ரீவள்ளி ராஷ்மிகா, ஹாங்காங்கின் ஹாங் வாங்கை எதிர்கொண்டார். முதல் செட்டை 7-6 என வசப்படுத்திய ராஷ்மிகா, அடுத்த செட்டை 2-6 நழுவவிட்டார். மூன்றாவது, கடைசி செட்டில் அசத்திய இவர், 6-3 என வென்றார். முடிவில் ராஷ்மிகா 7-6, 2-6, 6-3 என வெற்றி பெற்றார். இந்திய அணி 2-0 என வென்றது.
26-Mar-2025