உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / டென்னிஸ் / அரையிறுதியில் ராஷ்மிகா, லட்சுமி

அரையிறுதியில் ராஷ்மிகா, லட்சுமி

மைசூரு: மைசூரு ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் அரையிறுதிக்கு இந்தியாவின் ராஷ்மிகா, லட்சுமிபிரபா முன்னேறினார்.இந்தியாவின் மைசூருவில் பெண்களுக்கான ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் காலிறுதியில் இந்தியாவின் ஸ்ரீவள்ளி ராஷ்மிகா, சக வீராங்கனை ஆகான்ஷாவை எதிர்கொண்டார். ஒரு மணி நேரம், 09 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் ராஷ்மிகா 6-2, 6-3 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று, அரையிறுதிக்குள் நுழைந்தார். மற்றொரு காலிறுதியில் இந்தியாவின் ரியா பாட்யா, 0-6, 6-0, 7-5 என சக வீராங்கனை ஸ்மிருதியை வீழ்த்தினார்.இரட்டையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் ஸ்மிருதி, சோகா ஜோடி, ரஷ்யாவின் போலினா, ராலினா ஜோடியை 6-1, 6-3 என வீழ்த்தி, பைனலுக்கு முன்னேறியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை