உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / நில அளவீடுக்கு எதிர்ப்பு தெரிவித்து தற்கொலைக்கு முயன்ற முதியவர்

நில அளவீடுக்கு எதிர்ப்பு தெரிவித்து தற்கொலைக்கு முயன்ற முதியவர்

பவுஞ்சூர்:பவுஞ்சூரில், நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலத்தை அளவீடு செய்ய எதிர்ப்பு தெரிவித்த நபர், திடீரென தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. பவுஞ்சூர் பஜார் பகுதியை சேர்ந்தவர் உதயகுமார், 60. இவருக்கும், சித்தாமூர் பகுதியை சேர்ந்த லோகநாதன் என்பவருக்கும், 1.5 சென்ட் வீட்டு மனை தொடர்பாக தகராறு இருந்து வருகிறது. செய்யூர் நீதிமன்றத்தில், இதுதொடர்பாக வழக்கும் நடந்து வருகிறது. இந்நிலையில், நிலத்தை அளவீடு செய்ய சென்னை உயர் நீதிமன்றத்தில் அனுமதி பெற்ற லோகநாதன் தரப்பினர், 30க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் வருவாய் துறையினருடன் வந்து, நேற்று நிலத்தை அளவீடு செய்ய முயன்றனர். அப்போது, செய்யூர் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வரும் நிலையில், இடத்தை அளவீடு செய்யக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்த உதயகுமார், உடலில் டீசலை ஊற்றிக்கொண்டு, தற்கொலைக்கு முயன்றார். உடனே, அங்கிருந்த போலீசார், தற்கொலை முயற்சியை தடுத்ததுடன், உதயகுமார் மற்றும் அவரது மருமகன் அருணை கைது செய்தனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை