உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / படாளத்தில் டயர் வெடித்து கவிழ்ந்த அரசு பேருந்து

படாளத்தில் டயர் வெடித்து கவிழ்ந்த அரசு பேருந்து

மதுராந்தகம்:சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து கன்னியாகுமரி மாவட்டம், முட்டம் நோக்கி, 43 பயணியருடன், அரசு விரைவு பேருந்து சென்றது.செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த படாளம் காவல் நிலையம் அருகே, எதிர்பாராத விதமாக பேருந்தின் முன் சக்கர டயர் வெடித்து, சாலையின் நடுவே பேருந்து ஒருபுறமாக சாய்ந்தது.அதில், பயணம் செய்த 43 பேரில், 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.தகவலின்படி சம்பவ இடத்திற்கு வந்த படாளம் போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் வாயிலாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பேருந்து ஓட்டுநர், நடத்துநர் சிறு காயங்களின்றி உயிர் தப்பினர்.இதனால், சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து, படாளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை