மேல்நிலை தொட்டி சேதம் சிறுபேர்பாண்டியில் ஆபத்து
அச்சிறுபாக்கம்,:அச்சிறுபாக்கம் ஒன்றியம், சிறுபேர்பாண்டி ஊராட்சியில், 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.இப்பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக, சிறுபேர்பாண்டி - எலப்பாக்கம் சாலையில், குளக்கரை அருகே, 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டு, குடிநீர் குழாய் வாயிலாக, மக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வந்தது.இந்நிலையில், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டு, 20 ஆண்டுகள் ஆன நிலையில், துாண்களின் அடிப்பகுதியில் உள்ள சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்து, துருப்பிடித்த இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன.இதனால், தொட்டியின் துாண்கள், உறுதித்தன்மை இன்றி உள்ளன. தண்ணீர் தொட்டியின் உள் பகுதியில் சிமென்ட் பூச்சு உதிர்ந்து விழுவதால், குடிநீர் சுகாதாரமின்றி உள்ளது.எனவே, பழைய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை இடித்து அப்புறப்படுத்தி, மீண்டும் அதே பகுதியில், புதிதாக மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைத்து தர, மாவட்ட நிர்வாகம் மற்றும் ஊராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.