உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சூணாம்பேடில் அங்கன்வாடி மைய கட்டடம் அமைக்க வலியுறுத்தல்

சூணாம்பேடில் அங்கன்வாடி மைய கட்டடம் அமைக்க வலியுறுத்தல்

சூணாம்பேடு:சூணாம்பேடில் புதிய அங்கன்வாடி மையம் கட்ட வேண்டுமென, கோரிக்கை எழுந்துள்ளது.சூணாம்பேடு ஊராட்சிக்கு உட்பட்ட பஜார் பகுதியில் அங்கன்வாடி மையம் செயல்படுகிறது. இதில் 15 குழந்தைகள் படிக்கின்றனர். கர்ப்பிணியர் மற்றும் பாலுாட்டும் தாய்மார்கள் என 20 பேர் இணை உணவு மற்றும் ஊட்டச்சத்து பரிசோதனையால் பயனடைந்து வருகின்றனர். 35 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பழைய அங்கன்வாடி மைய கட்டடம் முறையான பராமரிப்பு இன்றி பழுதடைந்துள்ளது. இதையடுத்து இரண்டு ஆண்டுகளுக்கு முன் தனியார் கட்டடத்திற்கு மாற்றப்பட்டு செயல்படுகிறது. அங்கு போதிய இடவசதி இல்லாமல் குழந்தைகள் அவதிப்படுகின்றனர்.அதிகாரிகள் ஆய்வு செய்து குழந்தைகளின் நலன் கருதி, புதிய அங்கன்வாடி மையம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெற்றோர் எதிர்பார்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை