பூந்தமல்லியில் குப்பை கழிவு அகற்றப்படுமா?
பூந்தமல்லி வைத்தீஸ்வரன் கோவில் அருகே, தையல்நாயகி அம்மன் தெரு உள்ளது. இந்த தெரு வழியே, ஏராளமானோர் நடந்தும், வாகனங்களிலும் சென்று வருகின்றனர். இந்த தெருவில் பொதுமக்கள் கொட்டும் குப்பையை, பூந்தமல்லி நகராட்சி நிர்வாகத்தினர் தினமும் அகற்றுவதில்லை. அதனால் குப்பை தேங்கி, துர்நாற்றம் வீசி, சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. குப்பை கழிவுகளை விரைந்து அகற்ற வேண்டும்.-என்.சதிஷ், பூந்தமல்லி.