தாம்பரத்தில் 15 மாடுகள் சிறைபிடிப்பு
தாம்பரம், தாம்பரம் மாநகராட்சியில், சாலைகளில், பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக சுற்றித்திரியும் மாடுகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது.இதனால், மாநகராட்சி சார்பில், அவ்வப்போது மாடுகள் பிடிக்கப்பட்டு, அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. அபராதம் கட்டாத மாடுகள், கோசாலைக்கு அனுப்பப்படுகின்றன.இந்நிலையில், மாநகராட்சியில் உள்ள, 67,69,70 ஆகிய மூன்று வார்டுகளில், சாலைகளில் திரிந்த 15 மாடுகளை, மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் நேற்று பிடித்து, வாலாஜாபாத் கோசாலையில் அடைத்தனர்.